உளமாற ஓதி அந்த நற்பலன்களைப் பெறலாம். பெறலாம்.
1.
மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும் பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும், நீல மணியின் ஒளியுடன் கூடிய
அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனிவரின் புதல்வியுமான பராசக்தியை மனதில் தியானம் செய்கிறேன்.
2.
சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:
நான்கு கைகள் உடையவளும், தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும்,
நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும், குங்குமச் சிவப்பு மேனியுடையவளும், கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும் உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும் ஆன பராசக்தியான ஸ்யாமளா தேவியே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.
3.
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப
வனவாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா
ஸூகப்ரியே
உலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும், ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும், எப்பொழுதும் மங்கள வடிவானவளும், கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும் மதங்க முனிவரின்
புத்ரியுமான பராசக்தியே உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன். நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே, சங்கீதத்தில் பிரியமுடையவளே, செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே, ஹே மாதங்கி! எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக. கிளி என்னும்
சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்.
4.
ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த
ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட
பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப
காதம்ப காந்தார வாஸப்ரியே,
க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!
அம்ருதம் எனும் கடலின் மத்தியில்,
மனதைக் கவரும் சிறப்புடைய தீவில் வில்வ மரங்கள்
சூழ்ந்த பிரதேசத்தில் கற்பக விருட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கதம்ப மரக் காட்டில் வசிப்பவளே! யானைத்தோல் போர்த்திய சிவனின் பத்தினியே, அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரியமானவளே.
5.
ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா ஸம்ப்ரமாலோல
நீபஸ்ரகாபத்த சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே
சேகரீபூத
சீதாம்சுரேகா மயூகாவளீநத்த
ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக
ஸம்பாவிதே!
நீ பாடத்துவங்கி அந்த ஸங்கீத ரஸத்தில் திளைத்திருக்கும் தருணத்தில் உனது முதுகெலும்பின் அடிப்பாகம் வரை நீண்ட கூந்தலில் அணிந்திருக்கும் கதம்ப புஷ்ப கொத்துக்கள் அசைந்தாடுவதே தனி அழகு. ஹே! ஹிமவானின்
புதல்வியே! நீ சிரஸில் ஆபரணமாக அணிந்த சந்திர கலையின் கிரணங்களால் சூழப்பட்ட சுருள் சுருளான கருங்கூந்தல்களுடன் மிளிர்பவளே, சகல ஜனங்களாலும் பூஜிக்கப்படுபவளே!
6.
காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்ப
ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே
சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே
ஸூராமே ரமே
காமதேவனின் வில்லுக்கொத்த கொடிபோல் வளைந்த புருவங்களைக் கொண்ட உனது கண்கள் அந்தக் கொடியின் புஷ்பங்களோ எனும் பிரமைக்குரித்தானவளே, அம்ருதத்திற்கு நிகரான வாக்கு உடையவளே! கோரோசனை சாந்தினால் இடப்பட்ட அலங்கார திலகத்தின் அழகுடன் கூடியவளே! மனதிற்குகந்தவளே, ஐஸ்வர்யமே வடிவானவளே!
7.
ப்ரோல்ல ஸத்வாலிகா மௌக்தி கச்ரேணிகா
சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்
தலந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸௌரப்ய ஸம்ப்ராந்த
ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீஸ்வரே ஸூஸ்வரே பாஸ்வரே.
ஜொலிக்கும் காதணியின் முத்துக்களின் நிலவுபோல் ஒளிரும் சோபையுடனும் கன்னங்களில்
கஸ்தூரியினால் வரையப்பட்ட சித்திரங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு இங்கும் அங்கும் பறக்கின்ற வண்டுகளின் ரீங்காரத்துடன் கலந்த வீணை நாதத்துடன் இணைந்தவளே. வீணை மீட்டும் தோரணையினால் அசைகின்ற பனங்
குருத்தினால் அமைக்கப்பெற்ற விசேஷமான காதணிகளுடன் கூடியவளே, மந்திர சித்தி பெற்ற
சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே.
8.
வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த
தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே. திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலாலஸச் சக்ஷு
ஜராந்தோலன ஸமாக்ஷிப்த கர்ணைக
நீலோத்பலே, ச்யாமலே
பூரிதா சேஷலோகாபிவாஞ்
சாபலே நிர்மலே.
சிறந்த மதுபானத்தின் காரணமாக பிரகாசிக்கின்ற
கண்களின் சேஷ்டையினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு காதில் அணிந்த நீலத்தாமரை புஷ்பத்தை உடையவளே, நீலநிறத் திருமேனியுடையவளே. லோகங்களெல்லாம் நிரப்பும் விரும்பிய பலன்களை உடையவளே, பரிசுத்தமானவளே! ஐஸ்வர்யங்களை அளித்தும் அருள்பாலிக்கின்றவளே.
9.
ஸ்வேத பிந்தூல்லஸத்பால லாவண்ய நிஷ்யந்த
ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே
ஸர்வ மந்த்ராத்மிகே. ஸர்வ விச்வாத்மிகேகாளிகே
முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக
கற்பூரதாம்பூல கண்டோத்கரே ! ஞானமுத்ராகரே,
ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, கரே !
நெற்றியில் காணும் வியர்வைத்
துளிகளின் கூட்டமோ என்று பராமரிக்கக்கூடிய சோபை மிகுந்த புல்லாக்கு ஆபரணம் அணிந்தவளே! மந்திரங்களுக்கு இருப்பிடமானவளே! வெண்மையான புன்முறுவல் தவழும் உதடுகளில் விளங்கும் கற்பூர தாம்பூலம் பூண்டவளே, ஞானமே சின்னமாய் உடையவளே, சம்பத்துகள் அருள்பவளே, கையில் எழில் மிகுந்த தாமரை பூ ஏந்தியவளே!
10.
குந்த புஷ்பத்யுதி ஸ்நிக்த தந்தாவலீ
நிர்மலாலோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர
சோபாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே
முல்லை புஷ்பம் போல் சோபையுள்ள பல்வரிசைகளின் பிரகாசத்துடன்
கூடின அழகிய புன்முறுவல் தவழும் சிவந்த கீழுதடு உடையவளே.
11.
ஸுலலித நவயௌவனாரம்ப சந்த்ரோத யோத்வேல லாவண்ய
துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ஹ்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா
ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே
துவங்கும் யௌவனத்தின் சந்த்ரோதயம் போன்று சோபையுடன் கூடிய பாற்கடலிலிருந்து வெளிப்படும் சங்கின் அழகையும் மிஞ்சும் கழுத்துடையவளே.
நளின நடையுடையவளே! சிறந்த இரத்தினங்கள் அமைந்த ஒளிமிக்க ஆபரணங்களால் ப்ரகாசிக்கும் அழகிய அங்கங்களை உடையவளே, மங்கள ஸ்வரூபிணியே!
12.
ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே, யோகிபி: பூஜிதே:
விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத் கங்கணா லங்க்ருதே,
விப்ரமாலாங்க்ருதே,
ஸாதுபிஸ்ஸத்க்ருதே !
இரத்தினங்களை இழைத்த வங்கியின் ஒளிக்கிரணங்களால் சோபிக்கின்ற தோள்களுடன் விளங்குபவளே, யோகிகளால் வணங்கப்படுபவளே! திசைகளெல்லாம் ஒளிர்ப்பிக்கும் ப்ரகாசம் உடைய கங்கணத்தால் அலங்கரிக்கப்பட்டவளே, உபாஸகர்களால் பூஜிக்கப்படுபவளே!
13.
வாஸராரம்பவேலா
ஸமுஜ்ரும்பமாணாரவிந்த
ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.
திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம
ஸந்த்யாய மானாங்குலீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா (ஆ)
கண்டலே,
சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே
சூர்யோதயத்தில் மலர்ந்த தாமரை
புஷ்பத்திற்கு ஒப்பான கைகளையுடையவளே,
எப்பொழுதும் பெருக்கெடுக்கும் தயையுடையவளே, இரண்டற்று ஒன்றேயானவளே, கைகளை அலங்கரிக்கும் இரத்தின மோதிரங்களின் ஒளியில் சாயங்கால சிவந்த வானம் போன்றதில், நகம் எனும் சந்திரனைப் போல் பிரகாசமுடைய தளிர் விரல்களுடையவளே, ஞானமாகிற ஒளியினால் சூழப்பட்டவளே, ஒளிரும் குண்டலங்கள் பூண்டவளே.
14.
தாரகா ராஜிநீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ
வலிச்சேத விஸீஸ முல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே, கிங்கர கரே
ஹேம கும்போப மோத்துங்க வக்ஷோப பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே
லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே, மஞ்ஜூ ஸம்பாஷணே
நட்சத்திர மண்டலத்திற்கு ஒப்பான
ப்ரகாசமான முத்து மாலைகளின் வரிசை
யினால் சோபையூட்டப்பட்ட உயர்ந்த பரந்த மார்பகத்தின் பாரத்தினால் சிறிது மடிந்து வளைந்த இடையுள்ளவளே! கடல் போன்ற ஸௌந்தர்யங்களை உடையவளே, கைகளில் வீணை ஏந்தியவளும், குபேரனால் வணங்கப்படுபவளும் ஆனவளே! தங்கக்குடத்திற்கு ஒப்பான
மார்பின் பாரத்தினால் வணங்கினவளே, மூன்று லோகங்களாலும் பூஜிக்கப்படுபவளே, இனிய பேச்சுடையவளே.
15.
சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே
பத்ம ராகோல்லஸத் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே,சந்த்ரிகா சீதலே.
விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு
கச்சன்ன சாரு சோபா பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர
மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்கலே ச்யாமளே.
மன்மதனின் வில்லின் நாணுக்கொப்பான சலங்கை பொருந்திய அரை ஞாண் பூண்டவளே, ஜரிகை வஸ்த்திரம் அணிந்தவளே. பத்மராகக் கல்லினால் இழைத்த ஒட்டியாணத்தின் சோபையுடன் கூடிய
இடையுடையவளே, பௌர்ணமி நிலவு போன்று குளிர்ந்தவளே. மலர்ந்த பலாச பூ போல் சிவப்பு நிறப் புடவையினால் மூடப்பட்ட துடைகளின் பிரகாசத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தூரத்தினால் சிவந்த ஐராவதத்தின் துதிக்கை போன்று கையை உடையவளே, எல்லையற்ற வைபவங்களுடன் கூடியவளே, இந்திரநீல போன்ற நிறம் உடையவளே.
16.
கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸிதானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தல ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ
ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்க ஸாரங்கஸம்யோகரிங்க்கந்ந கேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.நிர்மலே!
அழகிய மென்மையான நீலத்தாமரை பூவிலான மன்மதனின் அம்புறாத்
தூணியோ என்றெண்ணக் கூடிய கொடி போன்ற கணுக்கால்களை உடையவளே, அழகிய விளையாடும் நடையுடையவளே. அடிபணியும் திக்பாலக ஸ்த்ரீகளின் சுருளான கருங்கூந்தல் கூட்டத்தின் நீலநிற சோபையினால், மானுடன் சம்பந்தம் சொல்லக்கூடிய அறுகம்புல் தளிர்களா அவை என்றெண்ணும்படியான, நகம் எனும் சந்திரன் போன்ற மிகையான
பிரகாசத்துடன் விளங்குபவளே.
17.
ப்ரஹ்வ தேவேச, பூதேச வாணீச கீநாச
தைத்யேச, யக்ஷேச, வாகீச, வாணேச,
கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலாதபோத் தாமலாக்ஷவர
ஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.
ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே,
ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன