ஒருகாலத்தில் ஹிந்துராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின் பெரும்பான்மையான மக்கள்
முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்.
இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit )எனும் கடைசி இந்து மன்னரை வீழ்த்தியபிறகு இந்து மதத்தைவிட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலி தீவுக்கு குடிபெயர்ந்தனர்
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
1. இங்கே ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது.
Nyepi day என சொல்கிறார்கள்.
மார்ச் 12ம்தேதி இந்த மௌனதினம் வருகிறது.
இந்துகளின் பண்டிகைபோன்ற அந்த நாளில் இந்தோனேசியா எங்கும் விடுமுறை அளிக்கபடுகிறது.
காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை எந்த போக்குவரத்தும் இருக்காது.
பன்னாட்டு விமானநிலையமான Denpasar (bali) விமான நிலையம்கூட மூடப்பட்டு இருக்கும்.
யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.
வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்
2.பாலியில் இருக்கும் இந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான் பாலி பள்ளிகளில் இன்றும்கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன அகஸ்திய, மார்கண்டேய,பரத்வாஜ ரிஷிகளைபற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில் ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள்கூட தெரிந்துவைத்து இருக்கிறார்கள்
3. பாலியில் ஆண் , பெண் என இருபாலருக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான்.
எந்த ஒரு பாலிகோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்லமுடியாது.
இந்தியாவில்கூட சில கோவில்களில் தான் பாரம்பரியஉடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற).
ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்துதான் செல்லவேண்டும்.
4. பாலியின் அரசியல் சமூக, பொருளாதார, கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana எனும் கோட்பாட்டின் படிதான் அமைந்துள்ளது.
அதை தான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லி கொடுக்கிறார்கள்.
Parahyangan - Pawongan - Palemahan என பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.
5. Trikala Sandhya என்பது சூரியநமஸ்காரம்
அணைத்து பாலிபள்ளிகளிலும் கட்டயாமாக மூன்றுவேலை சூரியநமஸ்காரம் செய்கிறார்கள்.
அதேபோல மூன்றுவேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்ல வேண்டும்.
பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்யவேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.
6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது.
முஸ்லிம் மதநாடான இந்தோனேசியாவில் அனைத்து மதகோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசேகொடுக்கிறது.
ஆனால் இந்தியா மதசார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ் செல்ல பணத்தை வாரி இறைக்கின்றது.
7. இந்தோனேசியாவின் மூதாதையர்கள் அனைவரும் இந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்தியகலாசாரமே அதிகம் கலந்துள்ளது.
8. உலகில் அரிசிவிளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய பங்கு வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது.
பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீதேவி, பூ தேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்குதான் படைக்கிறார்கள்.
அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள்.
9 வது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதி முறைகளை இந்து பெரியோர்கள் கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள்.
#Subak_system
இங்கே நீர்பாசனம் முழுவதும் கோயில் பூசாரிகளின் கட்டுபாட்டில்தான் இருக்கும்.
உலகவங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது.
இந்தியர்கள் கொண்டுவந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.
9. பாலி இந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதில்லை இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன் படுத்துகிறார்கள்.
ராமாணயம் அனைவருக்கும் தெரிந்துதிருக்கும்
ராமாணய ஓலை சுவடியை நல்ல நாட்களில் எடுத்துவரும் திருவிழா நடை பெறும்
10. அனைத்து திரு விழாகளிலும் பாலிநடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள்.
இந்துக்களின் சொர்க்கபூமி பாலி என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
உலகின் அழகியதீவுகளில் பாலி முக்கிய இடம்வகிக்கிறது.
அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம் பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என இந்த தீவு உலக சுற்றுலாபயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.