#திருநீரும்_ருத்திராட்சமும்
ஒரு ஊரில் இருந்த ஒரு திருடன், அவன் திருடாத இடமே இல்லை என்று மக்களுக்குக் கடும் அவதியை தந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ராஜாவிடம் சென்று முறையிட்டனர். அவன் யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்ததால் அரசர், இந்த திருடனை பிடித்துத் தந்தால் ருபாய் ஐந்து லட்சம் என

அறிவித்தார். சில நாட்கள் கழித்து அந்த அரசர், யார் பற்று இல்லாமல் இருகிறார்களோ அவருக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என அறிவித்தார். பின் மந்திரியிடம் நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடிப் பார்த்து அழைத்து வாரும் என ஆணையிட்டார். மந்திரி தேடி செல்லும்
போது இந்த திருடன் அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டான். மந்திரி ஒரு சூழ்ச்சி செய்தான். உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூறியுள்ளார். நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகிறேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கிறேன் என உறுதி அளித்தான். சரி என இந்த திருடனும்
சம்மதித்தான். அந்த திருடனுக்கு
திருநீறும் ருத்ராட்சமும் அணிவித்து ஒரு சன்யாசி போல் வேடமிட்டான் மந்திரி. பின் அவனிடம், நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இரு. ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல், கடைசியாக அவர் தன் ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை
வாங்கி என்னிடம் தா, நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன் என சொன்னான். பின் அந்த மந்திரி, ராஜாவிடம் சென்று, பற்றுகளை விட்டு மரத்தடியில் அமர்ந்துள்ள ஒரு சன்யாசியை கண்டுள்ளேன். அவரை தரிசித்து தங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள் என்றான். அரசர் சென்று மரத்தடியில் இருந்த
அந்த சன்யாசி (திருடன்)யின் காலில் விழுந்து வணங்கி, ஐயா தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொன்மாலை தருவேன் அதை எற்றுக்கொள்க என, சன்யாசி வேண்டாம் என்றார். பின் ஐந்துலட்சம், பத்து லட்சம். இருபது லட்சம், ஐம்பது லட்சம் என உயர்ந்த. நகை, பணம், என தானமாக தந்தார். சன்யாசி எதுவும் வேண்டாம்
என்றார். பின் ராஜா, நீயே சத்தியசீலன்! என் ராஜாங்கத்தில் பாதியை தங்களுக்கு தானமாக தருகிறேன். நீங்கள் அதை பெற்றுக் கொண்டு எனை வாழ்த்த வேண்டும் என்றார். இப்போது மந்திரிக்கு சந்தோஷம்! நாம் சொன்னது போலவே நடிக்கிறான் என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தான்! ஆனால் சன்யாசி இதற்கும்
வேண்டாம் என்றார். மந்திரி முகம் மாறி விட்டது. அடப்பாவி வேண்டாம் என்று சொல்லி விட்டானே, இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது, என்ன செய்வது என மனத்துக்குள்ளே குழம்பி நிற்க, கடைசியாக ராஜா தன் மகளையே சன்யாசிக்குத் திருமணம் செய்து தருகிறேன் என கூறினார். அதற்கு அந்த சன்யாசி,
ஐயா நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இது எல்லாம்? வேண்டாம் என்றார். நீரே உண்மையான பற்றற்ற ஞானி என அவரை விழுந்து வணங்கி சென்றார் அரசர். அதன் பின் அந்த மந்திரி வந்து, அடப்பாவி என் வயத்துல இப்படி மண் அள்ளி போட்டு விட்டாயே, இது நியாயமா என சண்டை போட, அதற்கு அந்த சன்யாசி, ஐயா நான்
திருடன் தான். எப்போது நீங்கள் என் மீது திருநீறும் ருட்த்ராட்சமும் தரித்தீர்களோ அப்போதே என் மனம் மாறிவிட்டது. மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம் என விலை வைத்த ராஜா, என் கோலத்தை பார்த்து என் காலில் விழுந்தார். அந்த பணிவு எனக்காக அல்ல, என் மேல் உள்ள இருந்த திறுநீறுக்கும்
ருத்ராட்சத்துக்கும் தான். நான் எதை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னேனோ அதை விட உயர்வான பெருள் தான் எனக்கு கிடைத்தது. மதிப்புள்ள இந்த பெருளை நான் வேண்டாம் என்றால் விலை மதிப்பில்லா அந்த இறைவன் எனக்கு கிடைப்பான் என்பதை புரிந்து கொண்டேன். அதுதான் எனக்குத் தேவை என்றார்.
ஆம், நண்பர்களே,
இந்த திறுநீறும் ருத்ராட்ச்சமும் நமக்கு கிடைத்த பொக்கிஷம். இதை வைத்து வியாபாரம் செய்யாமல் வறுமை வந்தாலும் வைராக்கியத்துடன் வாழ்ந்து வந்தால் நமக்கு நிச்சயம் இறைவன் அருள் உண்டு.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

More from அன்பெழில்

#மகாபெரியவா
காலம்:1930-களில் ஒரு வைகறை வேளைக்குச் சிறிது முன்னர்.
“எங்கே அவன்? எங்கே அவன்?” என்று வாய் விட்டுக் கோபமாகச் சொல்லிக் கொண்டு ஓர் அந்தண விதவை பாட்டி தனக்கு இடது பக்கம் கண் தெரிந்த வரையில் பார்வையைச் செலுத்துகிறாள்.{வலப் பக்கத்தில் கிராமம் முடிந்து விடுகிறது). உள்ளே


சென்றவள் மறுபடி வெளியே வந்து சாணி தெளிக்கிறாள். கோமய ஜலம் நிலத்தில் தொப்புத் தொப்பு என்று விழும் ஓசையையும் மீறிக்கொண்டு, பாட்டி தனக்குத் தானே பொரிந்து தள்ளிக் கொள்ளும் கோபச் சொற்கள் தொப்புத் தொப்பென்று விழுகின்றன. “கட்டேல போறவன்! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்? கெழவி, வாசக்

கதவைத் தெறந்து வச்சவ, ஏதோ சித்தக் கண்ண அசந்துட்டேன்னா, நாலு தரம் கையைத் தட்டிக் கூப்பிட்டு எழுப்ப மாட்டான்! அவனே சர்வ சுதந்திரமா ஆத்துக்குள்ள வந்து அடுக்களை வாசப்படி கிட்ட பாத்திரத்துல பாலை விட்டுட்டுப் போயிருக்கானே! கட்டேல போக! எங்கோயோ போய்ட்டானே அதுக்குள்ளே!”

“எங்கேயும் போகலே

பாட்டி! இங்கேதான் இருக்கான்” என்று சொல்லிக் கொண்டே அப்போது பாட்டியின் முன் போய் நின்றது ஸாக்ஷாத் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்! பாட்டியம்மாள் ஆடிப் போய்விட்டாள். “பெரியவாளா? நிஜமாகவே பெரியவாள்தானா? விடிய விடியத் தன் பொத்தல் குடிசை வாசலிலா? அதோடு

என்ன விபரீதம், க’—போனவனாகத் தம்மையே சொல்லிக்கொள்கிறார்! மூளை கெட்ட பாவி, மஹா அபசாரமா ஏதோ பண்ணிட்டேனா என்ன. பதைபதைத்தப் பாட்டிக்கு அபயம் தரும்போதே ஸ்ரீசரணரின் திருக் கண்களில் ஒரு குறும்புக் குறுகுறுப்பு! ஹிதமாகச் சொல்வார், “பயப்படாதே பாட்டீ! பால்காரன் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான்
#கோரக்கர் ஒரு சமுத்திரம். அவரின் குரு ஸ்ரீ #மச்சேந்திரநாதர் ஒருசமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கடற்கரை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராமதாரக மந்திரத்தின் பெருமையைச் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்தார். இதை மிகுந்த கவனத்துடன் ஒரு மீன்குஞ்சு கேட்டுக்


கொண்டிருந்தது. இந்த மகாமந்திரத்தை கேட்ட புண்ணியத்தால் அந்த மீன் குஞ்சு ஒரு மானிடனாக பிறந்தது. இவர் மீனாக இருந்து மானிட வடிவம் பெற்றவர் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்து இவரை மச்சேந்திரநாதர் என்று அழைக்கலாயினர். இவர் தோற்றத்திலும், செயல்களிலும் முனிவர் போல தோன்றினார். இறைவனின்

கருணையாலும், தோன்றும் போதே ராம தாரக மந்திர உபதேசம் பெற்றதாலும் ஞானதிருஷ்டி உடையவராக விளங்கினார். இறைவனது புகழைப் பாடியபடியே, பிச்சை எடுத்து உண்டு வந்தார், இரவில் இரண்டொரு வீடுகளில் நாராயணா என்பார், கிடைத்தால் உண்பார் இல்லாவிடில் இல்லை. பகலில் நகரங்களின் வழியாக செல்லாமல் வனங்களின்

வழியாகவே தீர்த்த யாத்திரை செல்வார். ஒரு நாள் சிற்றூர் ஒன்றில் உள்ள ஒரு வியாபாரியின் வீட்டின் முன் நின்று நாராயணா என்று கூவினார். உள்ளே இருந்த வணிகனின் மனைவி அன்னத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வந்தவள் இவரது தோற்றத்தைக் கண்டு இவர் தெய்வாம்சம் பெற்றவர் என்று உணர்ந்தாள். பிறகு,

இவரை நோக்கி, சுவாமி! இந்த வீட்டில் குழந்தை விளையாடும் பாக்கியம் இருக்கிறதா? என்று கேட்டாள். அவளது ஏக்கத்தை உணர்ந்த அவர் அம்மணி, இந்த திருநீற்றை உட்கொண்டால் உங்களது பாக்கியம் நிறைவேறும். திருமாலின் அம்சமாக ஒரு மைந்தன் தோன்றுவான் என்று சொல்லி ஒரு சிட்டிகை திருநீற்றை கொடுத்தார். அதை

More from All

You May Also Like

Ivor Cummins has been wrong (or lying) almost entirely throughout this pandemic and got paid handsomly for it.

He has been wrong (or lying) so often that it will be nearly impossible for me to track every grift, lie, deceit, manipulation he has pulled. I will use...


... other sources who have been trying to shine on light on this grifter (as I have tried to do, time and again:


Example #1: "Still not seeing Sweden signal versus Denmark really"... There it was (Images attached).
19 to 80 is an over 300% difference.

Tweet: https://t.co/36FnYnsRT9


Example #2 - "Yes, I'm comparing the Noridcs / No, you cannot compare the Nordics."

I wonder why...

Tweets: https://t.co/XLfoX4rpck / https://t.co/vjE1ctLU5x


Example #3 - "I'm only looking at what makes the data fit in my favour" a.k.a moving the goalposts.

Tweets: https://t.co/vcDpTu3qyj / https://t.co/CA3N6hC2Lq
I just finished Eric Adler's The Battle of the Classics, and wanted to say something about Joel Christiansen's review linked below. I am not sure what motivates the review (I speculate a bit below), but it gives a very misleading impression of the book. 1/x


The meat of the criticism is that the history Adler gives is insufficiently critical. Adler describes a few figures who had a great influence on how the modern US university was formed. It's certainly critical: it focuses on the social Darwinism of these figures. 2/x

Other insinuations and suggestions in the review seem wildly off the mark, distorted, or inappropriate-- for example, that the book is clickbaity (it is scholarly) or conservative (hardly) or connected to the events at the Capitol (give me a break). 3/x

The core question: in what sense is classics inherently racist? Classics is old. On Adler's account, it begins in ancient Rome and is revived in the Renaissance. Slavery (Christiansen's primary concern) is also very old. Let's say classics is an education for slaveowners. 4/x

It's worth remembering that literacy itself is elite throughout most of this history. Literacy is, then, also the education of slaveowners. We can honor oral and musical traditions without denying that literacy is, generally, good. 5/x