கேள்வி : ஹிந்து மதம் என்று உண்டா?
பதில் : உண்டு (1/11) @thangapushpam03 @dineshavin @JSKGopi

கேள்வி : ஹிந்து மதம் என்ற பெயர் யார் வைத்தார்கள்?
பதில் : ஹிந்து மதத்திற்குப் பெயர் கிடையாது. சனாதன மதம் (மிகவும் பழமை வாய்ந்த என்று பொருள்.) (2/11)
கேள்வி : பின் ஏன் ஹிந்து மதம் என்று அழைக்கப்படுகிறது?
பதில் : நாம் சிந்து நதிக்கு இப்புறம் வாழ்வதால் நம்மைச் சிந்துக்கள் என்று அழைத்து வந்தனர். இதுவே பரிணாம வளர்ச்சியாலும் பரிபாஷையாலும் பிற்காலத்தில் ஹிந்து என்று மாறிற்று. (காஞ்சி மகாபெரியவர் சொன்னது ) (3/11)
கேள்வி : ஹிந்து மதத்தின் ஸ்தாபகர் யார்?
பதில் : வேத வ்யாஸர் (4/11)
கேள்வி : எதற்காக ஹிந்து மதம் நிறுவப்பட்டது?
பதில் : எந்த மதமும் இரு விஷயங்களை மக்களுக்கு உணர்த்தத் தோண்டிற்று. அதே இவ்விரு விஷயத்தைச் சொன்ன முதல் மதம் ஹிந்து மதம். பிரயோஜனம் அற்ற ஆனால் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயத்தைச் சொல்வதற்கு மதம் தேவையில்லை. (5/11)
கேள்வி : அந்த இரண்டு விஷயம் என்ன ?
பதில் :
1.தர்மம் - (எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது),
a.தர்மத்தை வேதம் என்கிற சாஸ்திரத்தால் தெரிந்துகொள்ளவேண்டும்.
2.பரம்பொருளை உணருதல் - சாஸ்திரம் சொன்ன படி தர்மத்தை அனுசரித்து எவன் நேர்மையாக வாழ்வானோ அவன் பரம்பொருளை உணருகிறான். (6/11)
கேள்வி : பகுத்தறிவால் ஏன் தர்மத்தைக் தெரிந்துகொள்ளக் கூடாது ஏன் சாஸ்திரம் தேவைப் படுகிறது
பதில் : ஐந்து வருடத்திற்கு முன்பு செரி என்று பட்ட விஷயம் இன்று சரியில்லை என்று நமக்குப் படுகிறது இவ்வாறு இருக்கையில் நம் பகுத்தறிவை எப்படி நம்புவது? (7/11)
கேள்வி : சாஸ்திரத்தை மேற்கொண்டு தெரிந்துகொள்ள என்ன ஆதாரம் உள்ளது?
பதில் : பகவத்கீதையில் கிருஷ்ண பகவான் சொல்கிறார்

तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ

எது தர்மம் எது அதர்மம் என்று சாஸ்திரத்தைக் கொண்டு தான் தெரிந்துகொள்ளவேண்டும். (8/11)
கேள்வி : என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ஒன்றும் புரியவில்லை எனக்கு?
பதில் : சாஸ்திரத்தின் மூலம் படித்துத் தெரிந்துகொள்வது அறிவு. அறிவுடன் தர்மம் ஒத்து வாழ்ந்தால் பலன் கடவுள் என்கிற பரம்பொருள். பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவோம் இதற்கு மோட்சம் என்று பொருள். (9/11)
கேள்வி : இதற்கு ஆதாரம் உள்ளதா?
பதில் : உள்ளது (10/11)
तत्रापरा ऋग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्ववेदः
शिक्षा कल्पो व्याकरणं निरुक्तं छन्दो ज्योतिषमिति ।
अथ परा यया तदक्षरमधिगम्यते ॥ ५॥
வேதம்(ரிக், யஜுர், சாம, அதர்வண) மற்றும் ஆறு அங்கம் (ஸ்கிஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜ்யோதிஷம்) படிப்பதால் அபரா வித்யையை பயில்கிறான்(11/11)
यत्तदद्रेश्यमग्राह्यमगोत्रमवर्ण-
मचक्षुःश्रोत्रं तदपाणिपादम् ।
नित्यं विभुं सर्वगतं सुसूक्ष्मं
तदव्ययं यद्भूतयोनिं परिपश्यन्ति धीराः
பரம்பொருளை வர்ணித்து மேற்கொண்ட அறிவால் பரம்பொருளை அனுபவத்தின் மூலம் உணருகிறான் என்று பொருள் - முண்டகோபநிஷத்

More from All

You May Also Like