#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
அபிராமி பட்டர் அருளிய அபிராமி் அந்தாதி!
கிட்டத்தட்ட 275 ஆண்டுகளுக்கு முன்னால் திருக்கடையூரில் தோன்றிய உமை பக்தர் அவளுடைய அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானவர். 1/n

இவர் பாடிய அபிராமி அந்தாதி அம்பிகையிடம் நம்மை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் கொன்டது.
ஒருமனதோடு இதை தினம் பாராயணம் செய்பவர்கள் உமையின் அன்புக்கு பாத்திரமாகி பராசக்தியின் அருளை முழுமையாக பெருகின்றனர்.
அந்தாதியை பற்றி பல சம்பவங்கள் உன்டு. அவற்னில் ஒன்று; மன்னரின் அவையில் அமாவாசை திதியைவாய் தவரி பௌர்ணமி என்று சொன்ன அபிராமி பட்டரை 79வது
பாடலை பாடியவுடன் தனது பக்தனின் கூற்றை மெய்யாக்க தனது திருதோட்டை கழற்றி விண்ணில் எறிந்தருளினாள். அஃது நிறைமதியாக காட்சி தந்தது. 3/n
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
அந்தாதி பாடிய பட்டர் பதிகமும் பாடியருளினார். அம்பிகையின் திருவுருவினைக் கேசாதி பாதமாக நினைத்து மகிழ்ந்து ஒரு பதிகத்திலும், அம்பிகையின் திருப்பெயர்பளை எண்ணி மகிழ்ந்து மற்றொரு பதிகத்திலும் பாடியுள்ளார்!
#அபிராமிஅந்தாத #தினம்_ஒரு_பாடல்
காப்பு :
தாரமர் கொன்றையும் சென்பக மாலையுஞ் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
தில்லை நாயகனான பரம்பொருளும் அவனில் சரிபாதியான உமையவளின் மைந்தனே. மேகத்தை நிணைவுபடுத்தும் பேரழகு மேனியை கொன்ட பிள்ளையாரே, ஏழு உலகத்தையும் படைத்த அபிராமியின் பேரருளையும் அழகையும் போற்றி பாடும் இந்த அந்தாதி என் சிந்தையுள் ஊரி கிடக்கச் செய்தருள்வீராக!

More from All

You May Also Like