Nam Perumal, Srirangam, TN.
உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று
வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே.
(தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை - நான்காந் திருமொழி)
Meaning:
நாம் ஓரிடம் தேடி ஓட வேண்டாதபடி, நம் ஹ்ருதயத்திலுள்ளே எப்போதும் வந்து,
அனைவர் நெஞ்சத்துள்ளும் நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமானே! அரங்கா!
உன்னை நினைத்துக் கூடப் பார்க்க தகுதியும், அறிவுமில்லா மஹாபாபியான அடியேன்,
உன்னுடைய பரமபக்தன் போலே தோற்றம் கொண்டு,
“இவன் பரம பாகவதன், பரம பக்தன்” என்று காண்பவர்கள் எல்லோரும் வியந்து போற்றும் வண்ணம் சுற்றித் திரிகிறேன்.
"தொடையொத்த துவளமும், கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றபடி கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு அலைகிறேன்.
இத்தனை செய்த போதிலும், " அடடா! யார் யார் என்னென்ன நினைக்கிறார்கள்?" என்று அவரவர் நெஞ்சினுள்ளே உறைந்து நின்று,
எல்லாருடைய நினைவையும் நீ நன்கு அறிந்து கொண்டு விடுவாயே!" என்று நினைத்துக் கொள்கையில்,
,அப்படி என்றால், என்னைப் பற்றியும், எனது கள்ள வேஷத்தைப் பற்றியும் உனக்கு நன்றாகத் தெரியுமே!