#என்று_விழிக்குமோ_ஹிந்து_சமூகம்
ஆளும்/ஆண்ட அரசின் ஹிந்துக்கள் பண்டிகைகள் தொடர்பான ஒரு சார்பு கட்டுப்பாடுகளும்/தடையும்.
தற்போது ஆளும் திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே தன்னுடைய ஒரே குறி ஹிந்து மத தாக்குதல் என்கிற போக்கில் தான் பயணம் செய்கிறது.
அதற்கு இன்றுவரை வந்த எந்த பண்டிகையும் தப்பவில்லை. வரும் பண்டிகைகளும் தப்ப போவதும் இல்லை.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இரண்டு திராவிட கட்சிகளும் இந்துக்கள் பண்டிகையை தடை செய்யும் அல்லது கட்டுப்பாடு விதிக்கும் நோக்கிலேயே செயல்படுகின்றன.
ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்பது மட்டும் உண்மை.
இவர்களுக்கு மட்டும் இந்துக்கள் பண்டிகையான போகி பண்டிகையில் ஆரம்பிக்கும் அடாவடி கட்டுப்பாடுகள் கார்த்திகை வரை இருக்கும்.
1. #போகி பண்டிகை
சுற்றுசூழல் பாதிப்பு என முழக்கம் இடுவது. ஆனால் தினசரி தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை பற்றி வாயை திறக்க மாட்டார்கள்.
2.#பொங்கல் பண்டிகை
திமுக இது தான் தமிழ் புத்தாண்டு என முரண்பட்ட முன்னெடுப்பை முன் வைப்பது
இதில் திமுக நிலைப்பாடு இன்னும் வேடிக்கையானது. சமத்துவ பொங்கல் என்ற பெயரில் கிறுக்கு தனங்களை அரங்கேற்றம் செய்வது.கடவுள் இல்லை என்பவர்கள் யாருக்கு பொங்கல் வைத்து யாருக்கு நன்றி சொல்கிறார்கள்