Authors Wolfrik

7 days 30 days All time Recent Popular
இந்தியாவில் ஒரு பரபரப்பான செய்தி வெளிவந்திருக்கின்றது,மிகபெரும் கவனமும் எச்சரிக்கையும் கொடுத்திருக்கும் அந்த செய்தியினை தமிழக ஊடகங்கள் வழக்கம்போல் மவுனமாக்கி ஸ்டாலினாரின் இளமையிலும்,நயந்தாராவின் ஹனிமூன் படங்களிலும் மூழ்கி அவ்வப்போது சமூகநீதியிலும் கலந்து வழிந்து கொண்டிருக்கின்றன‌


அந்த செய்தி உண்மையில் கடுமையானது

சில நாட்களகாவே இந்தியாவில் சர்ச்சையான விஷயம் இரண்டு,முதலாவது கல்கத்தாவில் வங்க அமைச்சர் தன் காதலி மற்றும் அந்த காதலுக்கு அவசியமான பெரும் பணத்தோடு சிக்கியது,இரண்டாவது டெல்லியின் ஆம் ஆத்மி அமைச்சர் சிசோடியாவின் மேலான சர்ச்சைகளும் அதைவிட முக்கியமாக

அவரின் இணைவி அல்லது துணைவி நிஷா மேலான நீதிமன்ற தீர்ப்பும்

2015ம் ஆண்டு குர்கானில் நடந்த கலவரங்களுக்கும் பெரும் குழப்பங்களுக்கும் காரணமான 17 பேரை நீதிமன்றம் தண்டித்து 7 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதித்திருக்கின்றது

இந்த வழக்கில்தான் முக்கிய குற்றவாளியாக நிஷா சிங்

சேர்க்கபட்டிருகின்றார்

குர்கானில் மிகபெரிய வன்முறையினை அவர் கட்டவிழ்த்துவிட்டார் என்றும் தான் எம்.எல்.ஏ ஆவதற்காக மாபெரும் வன்முறைகளில் இறங்கினார் என்றும் நீதிமன்றமே சொல்லியிருக்கின்றது

அந்த குர்கான் கலவரங்கள் கடுமையானவை, கு2015ல் நடத்தபட்ட பெரும் வன்முறையில் பெட்ரோல் குண்டுகள்

வீசபட்டன,காஸ் சிலிண்டர்கள் வெடிக்க வைக்கபட்டன‌

ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியினை எதிர்த்துத்தான் இக்கலவரம் நடந்தது,அந்த கலவரத்தை திட்டமிட்டு தூண்டியவர் என்றுதான் இப்பொழுது ஆம் ஆத்மியின் நிஷா சிங்கினை நீதிமன்றம் ஆதாரத்துடன் தண்டித்துள்ளது

அந்த அளவு சாட்சிகளும் வாதங்களும்
பொன்னியின் செல்வன் கதை உண்மை கதையா என்றால் வரலாறு சொல்வது இதுதான்

இடைக்கால சோழர்கள் இருந்தது நிஜம்,அங்கு ஆதித்த கரிகாலன் கொல்லபட்ட குழப்பத்தில் ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்ததும் நிஜம்

அது சேரர், சோழர், பாண்டியர் என மூவரும் ஒருவரை ஒருவர் முறைத்தும் அரவணைத்தும் ஆண்ட வகையில்


அவரவர் நலனை காப்பதில் சரியாக இருந்தார்கள்

உதாரணமாக சேர நாட்டுக்கு அரிசியும் இதர தேவைகளும் பாண்டிய சேர நாட்டில் இருந்துதான் செல்லவேண்டும், அதே நேரம் சோழர்களுக்கு யானையும் இதர விஷயங்களும் சேர நாட்டில் இருந்துதான் வரவேண்டும்

பாண்டியருக்கு கிழக்கே கடலாடுவதில் சோழரோடு சில உரசலகள் உண்டு, இன்னும் பல உண்டு

இதனால் மூவரும் அடிக்கடி மோதுவார்கள், எவன் வலுத்தவனோ அவனை இருவர் சேர்ந்து எதிர்த்து ஒரு சமநிலை பேணுவார்கள்

அப்படி சோழ வம்சத்தை பாண்டியரும் சேரரும் சேர்ந்து எதித்த போரில் மதுரை சுந்தரபாண்டியனை

ஆதித்த கரிகாலன் எனும் சோழ மன்னன் மதுரையில் வென்று பின் காடுகளில் பதுங்கியிருந்த பாண்டியன் தலையினை வெட்டி எறிந்தான்

தங்கள் ஆதரவு பாண்டியனை தங்களை ஆதரித்த பாண்டியனை சோழன் வெட்டியதை அறிந்த சேர தேசத்து ராஜகுருக்கள் ஆதித்த கரிகாலனை சோழ நாட்டுக்குள்ளே வெட்டி கொன்றார்கள்

அந்நேரம் பெரும் குழப்பம் நீடித்தது, இனி எதிர்காலம் என்னாகும்? யார் அடுத்த அரசன்? எதிரிகள் வந்தால் என்னாகும் என பலத்த குழப்பமான காலமது, சேர பாண்டியரோடு சிங்களவர்களும் சேர்ந்து கொண்டார்கள்

அப்படிபட்ட நேரம் எல்லோரும் அடுத்த சோழ மன்னன் யார்?