Authors Wolfrik
இடைக்கால சோழர்கள் இருந்தது நிஜம்,அங்கு ஆதித்த கரிகாலன் கொல்லபட்ட குழப்பத்தில் ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்ததும் நிஜம்
அது சேரர், சோழர், பாண்டியர் என மூவரும் ஒருவரை ஒருவர் முறைத்தும் அரவணைத்தும் ஆண்ட வகையில்
\u0baa\u0bca\u0ba9\u0bcd\u0ba9\u0bbf\u0baf\u0bbf\u0ba9\u0bcd \u0b9a\u0bc6\u0bb2\u0bcd\u0bb5\u0ba9\u0bcd \u0b8e\u0ba9\u0bcd\u0baa\u0ba4\u0bc1 \u0b9a\u0bcb\u0bb4\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bbf\u0ba9\u0bcd \u0bb5\u0bb0\u0bb2\u0bbe\u0bb1\u0bc1 \u0b85\u0bb2\u0bcd\u0bb2.. \u0b85\u0ba4\u0bc1 \u0b95\u0bb2\u0bcd\u0b95\u0bbf \u0b8e\u0bb4\u0bc1\u0ba4\u0bbf\u0baf \u0b92\u0bb0\u0bc1 \u0b95\u0bb1\u0bcd\u0baa\u0ba9\u0bc8 \u0ba8\u0bbe\u0bb5\u0bb2\u0bcd \u0b85\u0bb5\u0bcd\u0bb5\u0bb3\u0bb5\u0bc1\u0ba4\u0bbe\u0ba9\u0bcd.
— Cartoonist Bala (@cartoonistbala) July 9, 2022
\u0baa\u0b9f\u0bae\u0bcd \u0bb5\u0bb0\u0b9f\u0bcd\u0b9f\u0bc1\u0bae\u0bcd.. \u0bae\u0ba3\u0bbf\u0bb0\u0ba4\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bae\u0bcd \u0b85\u0ba3\u0bcd\u0b9f\u0bcd \u0b95\u0bcb \u0b8e\u0bb5\u0bcd\u0bb5\u0bb3\u0bb5\u0bc1 \u0ba4\u0bbf\u0bb0\u0bbf\u0baa\u0bc1 \u0b9a\u0bc6\u0baf\u0bcd\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0b95\u0bcd\u0b95\u0bbf\u0bb1\u0bbe\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd \u0b8e\u0ba9\u0bcd\u0baa\u0ba4\u0bc8 \u0baa\u0bbe\u0bb0\u0bcd\u0baa\u0bcd\u0baa\u0bcb\u0bae\u0bcd.
அவரவர் நலனை காப்பதில் சரியாக இருந்தார்கள்
உதாரணமாக சேர நாட்டுக்கு அரிசியும் இதர தேவைகளும் பாண்டிய சேர நாட்டில் இருந்துதான் செல்லவேண்டும், அதே நேரம் சோழர்களுக்கு யானையும் இதர விஷயங்களும் சேர நாட்டில் இருந்துதான் வரவேண்டும்
பாண்டியருக்கு கிழக்கே கடலாடுவதில் சோழரோடு சில உரசலகள் உண்டு, இன்னும் பல உண்டு
இதனால் மூவரும் அடிக்கடி மோதுவார்கள், எவன் வலுத்தவனோ அவனை இருவர் சேர்ந்து எதிர்த்து ஒரு சமநிலை பேணுவார்கள்
அப்படி சோழ வம்சத்தை பாண்டியரும் சேரரும் சேர்ந்து எதித்த போரில் மதுரை சுந்தரபாண்டியனை
ஆதித்த கரிகாலன் எனும் சோழ மன்னன் மதுரையில் வென்று பின் காடுகளில் பதுங்கியிருந்த பாண்டியன் தலையினை வெட்டி எறிந்தான்
தங்கள் ஆதரவு பாண்டியனை தங்களை ஆதரித்த பாண்டியனை சோழன் வெட்டியதை அறிந்த சேர தேசத்து ராஜகுருக்கள் ஆதித்த கரிகாலனை சோழ நாட்டுக்குள்ளே வெட்டி கொன்றார்கள்
அந்நேரம் பெரும் குழப்பம் நீடித்தது, இனி எதிர்காலம் என்னாகும்? யார் அடுத்த அரசன்? எதிரிகள் வந்தால் என்னாகும் என பலத்த குழப்பமான காலமது, சேர பாண்டியரோடு சிங்களவர்களும் சேர்ந்து கொண்டார்கள்
அப்படிபட்ட நேரம் எல்லோரும் அடுத்த சோழ மன்னன் யார்?