ஷண்முகநாதன் என்பவர் (அவர் யாரென தெரியவில்லை) எழுதியதாக என் நண்பன் மஸ்கட்டிலிருந்து 'வாட்ஸ்ஆப்'பில் அனுப்பிய செய்தி.
அதில் 'திராவிட மாடல்' என்ற 'டப்பா' வண்டியையும் அதன் ஓட்டுனரையும் ரோடு ரோலரால் முன்னும் பின்னும் ஏற்றி, இறக்கி நசுக்கி எடுத்து விட்டார்.
படிச்சி enoy பண்ணுங்க!!!
'அவர் ஆபத்தானவர்'என்று அவர்கள் கொக்கரித்த போது கூட அவ்வளவு நம்பவில்லை. இப்பொழுது நம்புகிறேன், அவர் ஆபத்தானவர்.
பைத்தியத்தின் கையில் கிடைத்த கூர்மையான கத்தி ஆபத்தானது. அந்த வகையில் அவர் ஆபத்தானவர். பைத்தியத்தின் கையில் கிடைத்த துப்பாக்கி ஆபத்தானது, அந்த வகையில் அவர் ஆபத்தானவர்
இதையேதான் வள்ளுவன் "பேதைகளின், முட்டாள்களின் கையில் ஒரு பொருள் கிடைத்தால், கள்ளுண்டவர்களைப்போல நடந்து கொள்வார்கள்" என்றான்.
"மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்"
ஒரு பேதையின் கையில் ஒரு அரசாங்கம் கிடைத்திருக்கிறது. ஆபத்து!
யாரோ எழுதிக்கொடுத்ததை, வார்த்தைக்கு வார்த்தை, துண்டு சீட்டைப் பார்த்து படிக்கும் பொம்மை முதல்வர் தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் ஆபத்தானவர்.
31000 கோடி நலத்திட்டங்கள் அறிவிக்க வரும் பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு he is playing to the gallery. ஒன்றியம் ஒன்றியம் என்று சொல்லி
வெறுப்பேற்றுகிறாராம். என்ன பைத்தியக்காரத்தனம்! ஒரு maturity வேண்டாமா! கைதட்டல் அவ்வளவு முக்கியமா? நன்றி என்ற உணர்வு எங்காவது உடம்பில் மனதில் கொஞ்சமாவது இருக்கிறதா இந்த திராவிட மாடல் பைத்தியங்களுக்கு?
இடையில் தன் தந்தையின் வார்த்தைகளை சொல்லி மிரட்டல் வேறு.