From Facebook
Brahmana Sampradaya
ஒரு நாள், பார்த்த சாரதி கோவிலுக்கு போனேன்.
பக்தி ரசத்தில் அல்ல; ரசம் வைக்க ஈயச்சொம்பும், வத்தக் குழம்புக்கு கல் சட்டியும் வாங்க
கோவிலை ஒட்டிய ஒரு சிறிய சந்தில், வரிசையான, ஸ்ட்ரீட் ஹவுசஸ். எல்லாம் பழைய வீடுகள்.
அந்தத் தெருவில் ஒரே ஒரு வீட்டில்தான் கல்சட்டி விற்பனை.
அந்தத் தெருவிற்குப் போனதும், என்னை முதலில் கவர்ந்தது, ஒரு திண்ணை வைத்த வீடு.அந்தத் திண்ணையில் ஒரு மிக வயதான பாட்டி -உட்கார்ந்த வாக்கில் கை பம்ப்பில் தண்ணீர் அடிக்கிறார்.
அவர்களை விட சற்றே சிறிய மாமி, குடத்தில் அதை பிடித்து, நாலு படி ஏறி உள்ளே கொண்டு நிரப்புகிறார்.
கல்சட்டி வியாபாரத்தை சட்டென்று முடித்து, சுவாதீனமாக அந்தத் திண்ணையில் போய் உட்கார்ந்தேன்.
பேச்சுக் கொடுத்தேன்.
இனி எங்கள் உரையாடல் :-
நான்... "பாட்டி, இந்த வயதில், நடமாட்டம் கூட இல்லாத நீங்கள், தண்ணீர் அடிக்கிறீர்கள்?"
பாட்டி : "அதனால் என்னம்மா? நம் வீட்டு வேலை தானே. இதோ எதிர்த்தார்ப் போல் நாராயணன்.. அவன் பார்த்துப்பான். நானா அடிக்கிறேன்; அவன் ன்னா என் கையில் புகுந்து அடிக்கிறான்"
நான் - "பாட்டி, தண்ணீர் பிடித்து நடையாய் நடந்து ரொப்புவது யார்?"
பாட்டி - "அவள் என் சின்ன ஓர்ப்படி. அவள் மூலமாகத்தான் நாராயணன் எனக்கு பிடி சாதம் தினமும் தருகிறான்"
நான் - "வேறு யார் யார் இருக்கிறார்கள்?"
பாட்டி - எனக்கு ரொம்ப சின்ன வயதில் கல்யாணமாகி, இந்தாத்துக்கு வந்தேன்.