மாதந்தோறும் இருமுறை, அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று வளர்பிறை, தேய்பிறைக்குப் பின் வரும் திரயோதசி-13ஆம் நாள் #பிரதோஷம். அத்தினங்களில் மாலை 4.30-6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பல நல்ல விஷயங்கள் தோன்றியபோதும்
அதனுடனே ஆலகால விஷமும் தோன்றியது. அனைத்து உயிர்களையும் காப்பாற்ற சிவபெருமான் அவ்விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட அவர் நீலகண்டனானார். இந்த நேரம் தான் #பிரதோஷகாலம் என்று
வணங்கப்படுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார். அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, லட்சுமி தேவி பாடுகிறாள். திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும்
கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராணம். சிவாலயங்களில் அந்நேரத்தில் சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து பின் தீபாராதனை செய்து வழிபாடு நடக்கிறது.
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் ஆகியவையால் அபிஷேகமும் பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும்