Authors 𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆
7 days
30 days
All time
Recent
Popular
ஒரு நிமிடத்தில் இத்தனை பொய்கள் சொல்வதில் இவர்களை மிஞ்ச முடியாது. முதலில் திருமுருகாற்றுப்படை 11வது திருமுறையில் 9வது என்கிறார். 11வது திருமுறையில் 16வது இடத்தில் இருப்பது திருமுருகாற்றுப்படை. சரி கணக்கில் வீக் என்று விட்டுவிட்டு மேலே கவனித்தால், உவேசா மீது சேற்றை வீசுகிறார்
அதாவது பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையை உவேசா சேர்த்துவிட்டாராம்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நச்சினார்கினியர் முருகாற்றுப்படை உட்பட பத்துப்பாட்டுத் தொகைக்கு உரை எழுதியதும்,தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் போன்றோர் பத்துப்பாட்டு பாடல்களை மேற்கோள்காட்டியதும் இவருக்கு
தெரியாது போலும். நச்சினார்க்கினியர் உரை எழுதியவைகளைப் பட்டியலிடும் பாடல் பத்துப்பாட்டைக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்
பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட்டும் கலியும்
ஆரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்கும்-சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே.
சரி பத்துப்பாட்டில் உள்ள நூல்கள் என்னென்ன என்பதை பட்டியலிடும் பழம்பாடலைப் பாருங்கள்
முருகு பொருநாறு பாண் இரண்டு, முல்லை,
பெருகு வள மதுரைக் காஞ்சி, - மருவினிய
கோல நெடுநல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும், பத்து.
முதலிலேயே முருகாற்றுப்படை வந்துவிடுகிறது.
இதை உவேசா சேர்த்தார் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். சரி,பத்துப்பாடல் தொகுப்பின் அடிப்படை என்ன. நீண்ட அகவற்பாடல்களைக் கொண்ட சங்க இலக்கியம் பத்துப்பாட்டு.அதன் இலக்கணம்
நூறு அடிச் சிறுமை, நூற்றுப்பத்து அளவே
ஏறிய அடியின் ஈர் ஐம்பாட்டுத்
தொகுப்பது பத்துப்பாட்டு எனப்படுமே
RCI garu, u might want to see.
— Vignesh (@Vignesh95745892) January 11, 2021
\u0b89\u0bb5\u0bc7\u0b9a\u0bbe; \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bae\u0bc1\u0bb0\u0bc1\u0b95\u0bbe\u0bb1\u0bcd\u0bb1\u0bc1\u0baa\u0bcd\u0baa\u0b9f\u0bc8 pic.twitter.com/h9RGsDhF3T
அதாவது பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையை உவேசா சேர்த்துவிட்டாராம்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நச்சினார்கினியர் முருகாற்றுப்படை உட்பட பத்துப்பாட்டுத் தொகைக்கு உரை எழுதியதும்,தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் போன்றோர் பத்துப்பாட்டு பாடல்களை மேற்கோள்காட்டியதும் இவருக்கு
தெரியாது போலும். நச்சினார்க்கினியர் உரை எழுதியவைகளைப் பட்டியலிடும் பாடல் பத்துப்பாட்டைக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்
பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட்டும் கலியும்
ஆரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்கும்-சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே.
சரி பத்துப்பாட்டில் உள்ள நூல்கள் என்னென்ன என்பதை பட்டியலிடும் பழம்பாடலைப் பாருங்கள்
முருகு பொருநாறு பாண் இரண்டு, முல்லை,
பெருகு வள மதுரைக் காஞ்சி, - மருவினிய
கோல நெடுநல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும், பத்து.
முதலிலேயே முருகாற்றுப்படை வந்துவிடுகிறது.
இதை உவேசா சேர்த்தார் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். சரி,பத்துப்பாடல் தொகுப்பின் அடிப்படை என்ன. நீண்ட அகவற்பாடல்களைக் கொண்ட சங்க இலக்கியம் பத்துப்பாட்டு.அதன் இலக்கணம்
நூறு அடிச் சிறுமை, நூற்றுப்பத்து அளவே
ஏறிய அடியின் ஈர் ஐம்பாட்டுத்
தொகுப்பது பத்துப்பாட்டு எனப்படுமே