Authors கிருஷ்ணதாசன்

7 days 30 days All time Recent Popular
பூதனை வதத்திற்கு பின்...

“அடியே விசாலாட்சி, இந்த ஆச்சர்யத்தைக் கேள்விப்பட்டியோ?”

“எதைச் சொல்றே நீ சத்யா, நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைப்பத்தித் தானே?”

“வேறே என்ன விஷயம் இருக்கு பேச?”

“ஆமாம். கேள்விப்பட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு


உள்ளே போய் யசோதையைக் கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்”

“என்ன?”

“யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலம்பற வந்தாளாம். உங்க வீட்டு குழந்தை ரொம்ப அழகாக இருப்பானாமே, நான் பார்க்கலாமா என்று கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தையை தூக்கி அவள் கையிலே தந்திருக்கு. அவள் சப்பளிக்க உட்கார்ந்து மடியிலே

போட்டுக் கொஞ்சியிருக்கா. நான் இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா. இந்த பேக்கு சரின்னு தலையாட்டியிருக்கு”.

“அப்புறம்?”

“என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ?”

“சரி, சரி நீயே சொல்லுடி”

“என்ன ஆச்சோ தெரியல்லை. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு குடிக்க

முயற்சித்தபோதே அந்த பெண் அலறிண்டே அப்படியே சாஞ்சுட்டாளாம். அவ இருந்த இடத்திலே ஒரு பெரிய ராட்சசி கோரமாகக் செத்துக் கிடந்தாளாம். குழந்தை அவ மேலே விளயாடிண்டிருந்ததைப் பார்த்துட்டு நந்தகோபனும் மற்ற கோபர்களும் ஓடி வந்து குழந்தையை அப்புறப்படுத்திட்டு அந்த ராட்சசி யாருன்னு

கண்டுபிடிச்சிருக்கா. அப்பறம் அவளைத் தூக்கிக்கொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாளாம்”

“யாராம்?”

“பூதனை என்று பேராம். குழந்தையைக் கொல்ல வந்திருக்கலாம் என்று சொல்றா. ஏதோ யசோதை பண்ணின புண்ணியம், கடவுள் காப்பாத்தியிருக்கார். இல்லேன்னா குழந்தைக்கல்லவோ ஆபத்து ஏற்பட்டிருக்கும்!”
🌹🌺 “""" நண்பா... என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்ட நாத்திக நண்பன் - விளக்கும் எளிய கதை 🌹🌺
-----------------------------------------------------------------

🌺 சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள், செல்வா நாத்திகன், வாய்


ஜால திறமையுடைவன், சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வா மேடையில் பிரசங்கம் செய்வதோ, "கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்பதே வேலை.

🌺எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாய் ஜால திறமையுடன்

சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான்.
🌺செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்று அழைத்தான்.

🌺அப்போது நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

🌺"நண்பா... என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் செல்வா.

🌺பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே

பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.தின்று முடித்த பின்பு நாத்திக நண்பனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

🌺"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு